Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

செவ்வாய், அக்டோபர் 19, 2010

கற்பூரவல்லி

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

கற்பூரவல்லி எனும் மூலிகை அனைத்து இடங்களிலும் பரவிக் கிடக்கும் அனைவரும் அறிந்த செடியினம்

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.

ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும்

மனைவியை மயக்க

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்

குங்க்ஃபூ பாண்டாவும் வாழ்க்கைத் தத்துவமு

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

ஹாலிவுட்டில் எடுத்த ஒரு ‘அனிமேஷன்’ படத்தில், அதுவும் விலங்குகளை நாயக நாயகியராக சித்தரிக்கும் ஒரு படத்தில் மிக நல்ல வாழ்க்கைத் தத்துவங்களைச் சொல்ல முடியும் என்பதை குங்க்ஃபூ பாண்டா (Kungfu Panda) திரைப்படம் நிரூபித்திருக்கிறது. கதை ஒன்றும் பிரமாதமானதில்லை. சாதாரணமானது தான்.

உயிர் உருவான கதை

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

பூமியில் உயிர் உருவானது எப்படி? என்று மனிதகுலம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. இத்தகைய தொடக்ககால புதிர்களுக்கு விடைகாணும் ஆசை, மனிதர் அனைவருக்கும் உள்ளது. தொழில் நுட்ப முன்னேற்றம் மிகுந்துள்ள இந்த காலக்கட்டம் உயிரின தோற்றத்தை தெளியவைக்கும் என பலர் எண்ணுகின்றனர். 

டாக்டரின் ஆலோசனைகள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

புற்றுநோயை எதிர்க்கும் ஆப்பிள்

பெண்களை பயமுறுத்தும் நோய்களுள் ஒன்று மார்பக புற்றுநோய். அந்த நோயை தடுக்கும் ஆற்றல் ஆப்பிள் பழத்திற்கு உள்ளது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசி ரியர் ரூய் ஹாய் லியு, முதலில் எலிகளுக்கு ஆப்பிள் பழச்சாற்றை கொடுத்து சோதனை செய்தார். இந்த சோதனையில், அந்த எலிகளின் பால் சுரப்பிகளில் ஏற்பட்ட கட்டிகள் அளவில் சிறிதாகின. அத்துடன், அந்த கட்டிகள் எலிக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இதையடுத்து, சில விலங்குகளை வைத்தும் பேராசிரியர் லியு சோதனை செய்து பார்த்தார். இந்த சோதனையிலும் மார்பக புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் ஆப்பிள் பழங்களுக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், காய்கறிகளில் புற்றுநோயை கட்டுப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருப்பதும் இந்த சோதனையில் கூடுதலாக கண்டறியப்பட்டது.
"மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொண்டால், அந்த நோயின் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபட்டு விடலாம்'' என்கிறார் பேராசிரியர் லியு.


முகபருவை தடுக்க  
அதிக எண்ணெய்ப் பசை இருந்தால் முகத்தில் பரு வரவாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய்ப் பசையில்லாமல் பார்க்கவும் 1 டீஸ்பூன் ஒரேஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும். பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும்.
எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும். பயத்த மா, கடலை மா, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும் முகம் பொலிவு 
தேங்காய் எண்ணெயை முகத்திற்குத் தடவி, 10 நிமிடம் ஊறிய பிறகு, கடலை மா, சந்தனப் பொடி, எலுமிச்சைத் தோல் பொடி ஆகியவற்றின் கலவையால் முகத்தைத் தேய்த்துக் கழுவுங்கள். இதைச் செய்து வந்தால் நாளாவட்டத்தில் உங்கள் முகம் பொலிவு பெறும். 
  
காஃபி, தேநீர் - இரண்டில் எது நல்லது? 

நீங்கள் நகர்ப்புறத்தில் வசித்தாலும் சரி, கிராமங்களில் வசித்தாலும் சரி உங்களுக்கு காபியோ, தேநீரோ குடிக்கும் பழக்கம் நிச்சயம் இருக்கும். ஆனால், திடீரென ஒருநாள் ஏதாவது ஒரு பத்திரிகையில் காபி குடிப்பது கெடுதல், தேநீர் குடிப்பது நல்லது என்று ஒரு ஆய்வு முடிவு சொல்வதாக, பத்திரிகைகளில் செய்தி வெளிவரும். அடுத்து சில நாட்கள் கழித்து, இதை அப்படியே உல்டா செய்து இன்னாரு தகவல் வெளிவரும். உண்மையில் காஃபி நல்லதா, தேநீர் சிறந்ததா?

இந்தக் கேள்விக்குப் பதில் காண்பதற்கு முன்பு, காஃபி, தேநீர் ஆகிய பானங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். காஃபி, தேநீர் ஆகிய இரண்டு பானங்களிலுமே காஃபீன் என்ற பொருள் இருக்கிறது. உடலில் காஃபீன் சேரும்போது அது இதயத்தையும் மத்திய நரம்பு மண்டலத்தையும் தூண்டுகிறது. குறைந்த காலகட்டத்தில் ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. அதாவது மிகக் குறைந்த காலகட்டத்தில் அதிக அளவு காஃபியையோ, தேநீரையோ அருந்தினால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதனால், ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் காஃபி, தேநீர் குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அல்லது நிறுத்த வேண்டும். 
காஃபீனால் சில நன்மைகளும் இருக்கின்றன. இவை பித்தப்பையிலும் சிறுநீரகத்திலும் கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன. எடை குறைக்கும் மாத்திரைகளில் சிறிய அளவில் காஃபீன் சேர்க்கப்படுகிறது. இவை அதிகக் கொழுப்பை எந்தவித முயற்சியுமில்லாமல் கரைப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், உண்மையில் காஃபீன் இருக்கும் மாத்திரைகள் மிகக் குறைவான அளவிலேயே இந்த வேலையைச் செய்கின்றன. ஆனால், காஃபீனுக்கு பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. அதனால், சாப்பிடுவது குறைந்து எடை குறையலாம்.

ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி, குடிக்கலாம் என்று சொல்ல முடியாது. ஒவ்வாரு வகையிலான காஃபியிலும் இருக்கும் காஃபீனின் அளவு மாறும் என்பதால், ஒருவர் இவ்வளவுதான் காஃபி குடிக்கலாம் என்று சொல்ல முடியாது. தவிர, ஒவ்வொரு மனிதருக்கும் காஃபீனை ஏற்கும் அளவும் மாறுபடும். உயர் ரத்த அழுத்த குறைபாடு உடையவர்கள், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காஃபி குடிப்பதைக் குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களைப் பொறுத்தவரை, காஃபியை நீண்ட காலம் அருந்துவது உடல் நலத்திற்குத் தீங்கு செய்வதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. ஆனால், ஒரு நாளைக்கு மூன்று கப் அல்லது அதற்கு மேல் தேநீர் குடிப்பது அந்த அளவுக்கு தண்ணீர் குடித்தால் கிடைக்கும் பலன்களுக்கு இணையானது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதுபோக கூடுதல் நலன்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்திருக்கிறது. 

காஃபியிலும் தேநீரிலும் பாலிஃபினால்ஸ் என்ற பொருள் இருக்கிறது. இது நம் உணவில் இருக்கும் இரும்புடன் சேர்ந்துவிடும். அப்படிச் சேர்ந்துவிட்டால், அந்த இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவது கடினமாகிவிடும். அதனால், உணவு உண்பதற்கும் முன்பும் பின்பும் காபி, தேநீர் அருந்தக்கூடாது. 
 
 
தேநீரைப் பொறுத்தவரை, துத்தநாகம், மங்கனீஸ், பொட்டாசியம் போன்ற உடலுக்குத் தேவையான பல தனிமங்கள் தேநீரில் இருக்கின்றன. வழக்கமாக தேநீர் குடித்தால், அது உடலில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் என்றுதான் நம்ப்ப்பட்டுவந்த்து. ஆனால், தி யுரோப்பியன் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் நியூட்ரீஷியனில் வெளியான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை இதற்கு மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறது. அதாவது தண்ணீரைப் போலவே, தேநீரும் உடலில் இருக்கும் நீரின் அளவை அதிகரிக்கிறது. தவிர, இதய நோயைத் தடுப்பதோடு, சிலவகை புற்று நோயையும் தடுக்கிறதாம். தேனீரில் இருக்கும் ஃப்ளவோநாய்ட்ஸ் என்ற பாலிஃபினோல் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்களே இந்த உடல் நல செயல்பாடுகளுக்கு காரணம். இவை தேயிலையில் அதிக அளவு இருக்கின்றன. இந்த ஃப்ளவோநாய்ட்ஸ்கள் செல் சேதமடைவதைத் தடுக்கின்றன. ஒரு நாளைக்கு மூன்று - நான்கு கப் டீ குடிப்பது மாரடைப்பு வரும் வாய்ப்புகளைக் குறைப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இதுதவிர, பற் சொத்தை ஏற்படுவது, பல் அழுகுவது போன்றவற்றை தேநீர் தடுக்கிறது. எலும்புகளையும் உறுதி செய்கிறது. 
 

"உண்மையில் தேநீர் குடிப்பது தண்ணீர் குடிப்பதை விடச் சிறந்தது. தண்ணீர் உடலில் இருக்கும் நீர்ச் சத்தை மட்டுமே அதிகரிக்கிறது. ஆனால், தேநீர், நீர்ச் சத்தை அதிகரிப்பதோடு, ஆண்டிஆக்ஸிடண்ட்களையும் கொண்டிருக்கிறது. இதனால், நமக்கு இரட்டை பலன்கள் கிடைக்கின்றன. தேநீர் குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறையும் என்பது, நகர்ப்புற மாயை." என்கிறார் லண்டனின் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் கேரி ரக்ஸ்டன். தேநீர் அருந்துவது உடல் நலத்திற்குத் தீங்கானது என்பதற்கு சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. 
 
 
ஆக, இப்போதைக்கு, தேநீர் குடிப்பது, காபி குடிப்பதைவிட சிறந்த்து என்று வைத்துக்கொள்ளலாம். 


மாம்பழ சீசன் துவங்கிவிட்டது. எல்லா இடங்களிலும் மாம்பழங்கள் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுவதை காணமுடிகிறது.
 
மாம்பழத்தில் வைட்டமின் `ஏ' மற்றும் `சி' அதிகம் காணப்படுகிறது. மேலும், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துகளும் காணப்படுகின்றன. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த வைட்டமின்கள் மற்றும் சத்துகள் நமக்கு எளிதில் கிடைத்துவிடும். மாம்பழத்தை சாப்பிடுபவர்கள், அதன் தோல் பகுதியை பெரும்பாலும் நீக்கிவிட்டுதான் சாப்பிடுகிறார்கள். இது தவறு. மாம்பழத்தின் தோல் பகுதியில்தான் அதிக அளவில் வைட்டமின் `சி' உள்ளது.
 
மாம்பழத்தை சாப்பிட்டுவிட்டு தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சியம் மற்றும் கொழுப்புச்சத்துகள் காணப்படுகின்றன.
 
மாம்பழத்தின் பூர்வீகமே நம் இந்தியாதான். அப்படி இருக்கும்போது, நாம் மாம்பழம் சாப்பிடாமல் இருந்தால் எப்படி...?

திராட்சையை சாப்பிட வேண்டியவர்கள்  

 
ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.
பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.
திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.
திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும்.
உலர்ந்த திராட்சையை வெந்நீரில் போட்டு ஊற வைத்து பருகி வர மயக்கம் குணமாகும்.
சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது. 


திராட்சையை சாப்பிட வேண்டியவர்கள்  

 
ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.
பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

திராட்சைப் பழச் சாற்றை வெந்நீரில் கலந்து குடித்து வர சுரம், நாவறட்சி நீங்கும்.
திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும்.
உலர்ந்த திராட்சையை வெந்நீரில் போட்டு ஊற வைத்து பருகி வர மயக்கம் குணமாகும்.
சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது


http://www.mykathiravan.com/

உடலைப் பேண பத்து கட்டளைகள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்

காய்கறிகள் தரும் அழகு

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

நீங்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கிற காய்கள் தான் எல்லாம். விதம் விதமாய் அவற்றை சமைத்து சாப்பிடுகிற நீங்கள், அவற்றில் ஒளிந்திருக்கும் அழகுத் தன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள்.சமையலுக்குப் போக தினம் ஒரு பகுதியை அழகுக்கும் ஒதுக்குவீர்க

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம்.

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 

பூப்புனித நீராட்டு விழா

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

பெண்ணை அடிமைப்படுத்தும் சடங்குகள் தேவைதானா?

பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து பெண்ணானால் அதனைக் கருவிலேயே அழிக்கும் முயற்சிகள் இலங்கையில் இல்லை. ஆனால் கருவிலேயே பெண் குழந்தையை அழிப்பது மீறிப் பிறந்துவிடும் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொல்வது எல்லாம் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இன்றும் பரவலாக வழக்கில் உள்ள நடைமுறைகள்.

அவ்வாறு கருவிலேயே கட்டவிழ்த்து விடப்படும் பெண் மீதான வன்முறைகள் கல்லறை வரைக்கும் தொடர்கின்றன.

தாய்வழிச் சமூக அமைப்பில் உயிர் உற்பத்தியிலும் சமூகத்தில் உற்பத்திச் சக்திகளை உருவாக்குதலும் சம உரிமையோடும், சுதந்திரமாகவும் செயற்பட்ட பெண்கள் நிலவுடமைச் சமூக அமைப்பில் துணை நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தினரின் அனேக சடங்குகள் பெண்களை மையமாக வைத்தே கொண்டாடப்பட்டன. ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த ஒழுக்கக் காவலர்களாகவும் பெண்களே இருக்க வேண்டும். போன்ற கருத்துக்கள் எல்லாம் பின்னாளில் தோற்றம் பெற்றவைதான். பெண்களை அடிமைப்படுத்தும் சடங்குகளில் முக்கியமானவை ‘பூப்புனித நீராட்டு விழாக்கள், பெண்கள் மறு உற்பத்திக்குத் தயாராகிவிட்டதை உலகுக்கு உணர்த்தும் விழாவாகவே அது இன்று இருக்கின்றது.

பெண் பூப்படைதல் என்பது பல சமூகங்களில் கொண்டாட்டத்திற்குரியதாகவே இருந்திருக்கின்றது.

புதிய உலகத்தில்

பெரிய மனுசியாய்

கடமைகளுடன்

கால்தடம் பதிக்கிறாய்

வா

பெருமையுடனும்

மரியாதையுடனும்

வலிமை பொங்க

நடந்துவா

இன்று முதல்

நீ

நம் மக்களின் தாய்

நம் தேசத்தின் தாய்

பெண் பூப்படைதலைப் பெருமையுடன் பேசும் அப்பாச்சி இனப் பாடல் இது. முன்னைய காலங்களில் பூப்படைதல் தீட்டானதாகக் கருதப்படவில்லை. ஆனால் தந்தை வழிச் சமூக அமைப்பின் தோற்றத்தின் பின்னரே பூப்படைதல் என்பது தீட்டாகிப்போகிறது.

பெண் குழந்தை பெறுவதற்கு உடல் ரீதியாகத் தகுதிபெற்று விட்டதும் பூப்படைகின்றாள் பூப்பெய்தியதும் மாதா மாதம் அவளுக்கு மாதவிலக்கு ஏற்படுகின்றது. அவளது சினைப்பையில் உருவாகும் முட்டை கருத்தரிக்காத சமயங்களில் ஒரு சக்கரமாக ஒவ்வொரு மாதமும் அழிவடைகின்றது. முட்டை உடைந்து அழிவடையும் போது, சூழ உள்ள இழையங்களும் சிதைவடைந்து குருதியோடு வெளியேறுகின்றது.

அவ்வாறு மாதா மாதம் குருதி வெளியேறுவதாலேயே அது அசுத்தமானதாகக் கருதப்பட்டு ‘தீட்டு’ என்பதாகப் பெண்ணை ஒதுக்கி வைக்கின்றனர். 


பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:

பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்து விட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று சொல்வர். பெண்ணுக்கு முதலாவதாக நேரும் இந்தப் பூப்படைதல் நிகழ்ந்த பிறகே அவளுக்குப் பாலியல் சுகம் உண்டாகிறது என்பதில்லை. தனி நபரின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து பெண்ணின் பூப்புக்கு முன்போ பின்போ அத்தகைய சுகத்தை அவள் உணரலாம். எனவே, பூப்பு எனில் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்று விட்டாள் என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும். பெண் பூப்படைதல் சடங்கு பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்து விடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகி விட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.

ஆபிரிக்கா சுலு (Zulu) இனத்தில் ஒரு பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும். அந்தப் பெண் அவள் ஒத்தப் பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்த பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள். பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே பூப்படைந்த பெண்களும் பூப்படைந்த பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் அவரையும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்த பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.

இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென் இந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. ‘பூப்பு நன்னீராட்டல்’ என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.

இச்சடங்கு குறித்த பதிவை தமிழ்த் திரைப்படங்கள் அளவுக்கு யாரும் பதிவு செய்திருக்க முடியாது. தாய் மாமன் உரிமையிலிருந்து பூப்படைந்தவுடன் பெண்ணுக்கு பாலியல் உணர்வு ஏற்படுவதாகக் காட்டப்படும் காட்சி வரை உண்மை, பொய் அனைத்தையும் கலந்து கட்டிய பெருமை தமிழ்த் திரைப்படங்களுக்கே உண்டு.

இலங்கையில் மட்டுமல்லாமல் புலம்பெயர் வாழ்வில், தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் சடங்குகளில் முக்கியமானது பூப்புனித நீராட்டு விழா.

போட்டி போட்டுக் கொண்டு மிகுந்த ஆடம்பரத்துடன் தங்கள் பிள்ளைகளின் பூப்புனித நீராட்டு விழாவை நடாத்துவதில் பெற்றோர் முனைப்புக் காட்டுகின்றனர்.

ஆரம்பத்தில் பெண்ணின் பெருமை பேசுவதாய் அமைந்த இவ்விழா பின்னர், மாதமொரு தடவை அவள் தீட்டானவளாக விலக்கானவளாக ஆவாள் என்பதை உலகுக்கும் பறைச்சாட்டும் விழாவாக மாற்றம் பெற்றிருக்கின்றது.

இவ்வாறான சடங்குகளை கேள்விக்குட்படுத்தாமல், நாம் கொண்டாடிக் கொணடிருப்பதன் காரணம் என்ன?

பெண்ணுரிமை பேசுபவர்கள், பெண் விடுதலையில் உண்மையான அக்கறை கொண்டவர்கள், இவ்வாறான சடங்குகள் பெண்களை எவ்வாறு அடிமைப்படுத்துகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்


http://www.mykathiravan.com/

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.