Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

திங்கள், மார்ச் 22, 2010

வர்மத்தின் மர்மங்கள் உயிர்தரும் உயிர்க்காற்று

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.

ஞான சிருஷ்டி என்பது ஆத்மாவின் சக்திகளை ஒருங்கிணைத்து சித்தாக்கி அண்டசராசரங்களையும் கோள்களின் இயக்கத்தையும், முக்காலத்தையும் கண்டறியும்தன்மையாகும். இந்த ஞான சிருஷ்டி மூலம்தான் சித்தர்கள் உடலின் இயக்கம்,அதனால் உண்டாகும் தாக்கம் பற்றி அறிந்துகொண்டனர். அதுபோல் கோள்களின்ஆதிக்கத்தை கண்டறிந்து வானசாஸ்திரம், சோதிட சாஸ்திர நூல்களைப் படைத்தனர்.பிரபஞ்சத்தில் உள்ளது அனைத்தும் மனித உடலில் இருப்பதால் அண்டத்தில் உள்ளதுபிண்டத்திலும் உள்ளது என்றனர் சித்தர்கள். இதனால் ஒவ்வொரு உயிரினங்களைப்பற்றியும் துல்லியமாக ஆராய்ந்து அவர்களால் கூற முடிந்தது.

இந்த ஞான சிருஷ்டியை சித்தர்களும், ஞானிகளும் யோகிகளும் நீண்ட தவம்கொண்டு பிராண வாயுவை மூலாதாரத்தில் நிறுத்தி மூலாதார உயிர்க்காற்றைஉற்பத்தி செய்து அதன் மூலம் ஆதாரங்களை ஒரே நேர் கோட்டில் கொண்டு வந்துஉச்சந்தலையில் உள்ள தனஞ்செயனில் நிறுத்தி நெற்றி புருவ மத்தியில் ஞான ஒளிபெற்றனர். அப்போதுதான் அவர்களின் எண்ணங்கள், செயல்கள் ஒருங்கிணைந்தன.இதனால் சித்து நிலையடைந்து ஆத்மாவின் சக்திகள் அனைத்தையும் பெற்றனர்.



பிராண வாயு உடலுக்கு உயிர் சக்தியைக் கொடுக்கிறது. அது போன்றுமூலாதாரத்தில் உற்பத்தியாகும் உயிர்க் காற்றானது உடலுக்கு சக்தியைக்கொடுக்கிறது. இந்த மூலாதார உயிர்க் காற்று உடலெங்கும் வியாபித்து அனைத்துசெயல்களையும் தூண்டுகிறது.

உதாரணமாக ஒரு பொருளை தூக்க வேண்டும் என்றால் மூலாதாரக் காற்றை மூலத்தில்ஒடுக்கினால் தான் அந்தப் பொருளை தூக்க முடியும். சிரித்துக் கொண்டு ஒருபொருளை தூக்க முடியாது. ஏனெனில் சிரிப்பதால் மூலாதாரக் காற்றை மூலத்தில்நிறுத்த முடியாது. அது உடலெங்கும் பரவியிருக்கும்.

உடலின் அசைவுகளுக்கும், செய்யும் செயல்களுக்கும் மூலாதார காற்றே முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த மூலாதார உயிர்க்காற்று உற்பத்தியில்லாமலும், உடல் எங்கும் மூலாதாரக்காற்று பரவாமலும் இருந்தால் உடலில் ஒடுங்கியிருக்கின்ற உயிர் முடிச்சுகள்செயலிழந்து போகும். இதனால் உடலானது எத்தகைய அசைவுமின்றி இருக்கும். ஆனால்பிராணன் மட்டும் உள் சென்று வெளிவந்து உடலுக்கு உயிர் கொடுக்கும். உயிர்இருந்தும் உடல் அசைவற்று இருப்பதற்கு மூலாதார காற்றின் செயல் பாடின்மையேகாரணம்.

முறையாகவும், சீராகவும் மூலாதாரத்தில் உற்பத்தியாகும் உயிர்க்காற்றுஉடலெங்கும் வியாபித்தால் தான் உடல் சக்தி பெற்று மனிதன் நடமாட முடியும்.மூலாதார உயிர்க்காற்றுதான் செயல்களையும், சிந்தனைகளையும் முயற்சி களையும்தூண்டும் சக்தியாகும். அஷ்டமா சித்திகள் அனைத்தும் இந்த மூலாதார உயிர்க்காற்றிலே நிறைந்துள்ளது.

இதைத்தான் ஔவையார்

மூலாதாரத்து மூண்டெழுகனலை

காணலெழுப்பும் கருத்தறிவித்து 

என்று பாடியுள்ளார்.

உடல் நோயின் தாக்குதல் இல்லாமலும், சிந்தனையை செயலாக்கவும் மூலாதார உயிர்க்காற்றை முறைப்படுத்த சரசுவாசமே சிறந்த வழியாகும்.

மூலாதார உயிர்க்காற்று நரம்புகள் வழியே உடலெங்கும் பரவும் போது சிலசமயங்களில் நரம்பு முடிச்சுகளில் தடைபட்டுவிடுகின்றன. இதனால் உயிர்முடிச்சுகளில் செயல்பாடு பாதிக்கிறது. இதனால் உடல் பாதிப்படைகிறது.

மூலாதாரக் காற்றே உடலுக்கு சக்தி தரும் உயிர்க்காற்றாகும்.

.

www.newlankasri.com/ta

கருத்துகள் இல்லை: