Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

செவ்வாய், ஜூன் 29, 2010

பரிணாமம் - இனப்பெருக்கம்!

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam.


தன்னை தானே பெருக்கி கொள்ளும் ஒரு செல் உயிரியிலுருந்து பரிணாமத்தின் உச்சாணி கொம்பில் அமர்ந்திருக்கும் மனித இனம் வரை அனைத்திற்க்கும் தலையாய கடமை இனப்பெருக்கம், ஒரு உயிர் பல்கி பெருக அவைகளில் ஜீன்களில் எழுதபட்டிருக்கும் ஒரே விசயம் நீ வாழ்ந்தே ஆக வேண்டும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்!. காட்டு விலங்கிலிருந்து சமூக விலங்கான பிறகு மனித இனம் மட்டும்
தனக்கு தேவையானதை தானே உற்பத்தி செய்து கொள்ளும் தகுதியை வளர்த்து கொண்டது, மனிதனின் அபார வளர்ச்சி மற்ற உயிரின பெருக்கத்திற்கு பல வகையில் ஆபத்து என்றாலும் இயற்கை தன்னை சமன்படுத்தி கொள்ள சில நேரங்களில் கூட்டம் கூட்டமாக மனிதனையும் காவு வாங்குகிறது!
உயிரினத்தின் தொடக்கும், முதலில் தாவரங்களிலிருந்து விலங்கினமாக மாறியது என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் இருந்தும் படைப்புவத கொள்கையுடவர்களால் அதை ஏற்றுகொள்ள முடியவில்லை, வழக்கம் போல ஏன் இன்னும் குரங்கு குட்டைபாவாடை போடல என்பதிலேயே அவர்கள் கேள்வி நிற்கிறது, விலங்கு செல்லுக்கும், தாவர செல்லுக்கும் அதிகபடியான ஒற்றுமைகள் அறிவியலால் நிறுபிக்கபட்டாலும் எந்த விளக்கமும் கேட்காமல் அதை மறுக்கும் ஒரு சில கூட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன, நாம் இங்கே பார்க்கப்போவது தவாரங்களிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்திருந்தாலும் ஒரு சில உயிரினங்கள் அதன் நீட்சியை இன்னும் கடைபடித்து வருவதை தான்!




உயிரினங்களின் தொடர்ச்சி தன்னை தானே பெருக்கி கொள்ளும் ஒரு செல் உயிரியாக தான் வாழ்க்கையை ஆரம்பித்தது, இன்றும் பலதரபட்ட உயிரினங்களின் உள்ளிருந்து அதனை இயக்கி கொண்டிருப்பது செல்கள் தான், அவைகளில் பிரதி எடுக்கபட்டு பிரியும் ஒவ்வொரு செல்லும் அதே வடிவை மீண்டும் அடைகிறது, இவைகளின் சுழற்சியே ஒவ்வொரு உயிரனத்தையும் தனிதனி அடையாளத்துடன் வளர்க்கிறது, நரம்பு மணடலங்கள் பெறாத தாவரங்கள் தன்னை பெருக்கி கொள்ள ஆரம்பத்தில் காற்றையே நம்பியிருந்தது, முதல் உயிரினம் நீரும், ஒளி சார்ந்த இடத்தில் தோன்றியிருக்க தான் அதிகபட்ச சாத்தியகூறுகள் இருப்பதாக அறிவியல் கூறுகிறது, அது நாம் சாதாரணமாக பார்த்து பழகிய பாசி!

பலசெல் உடலைப்புடன் தனக்கு தேவையான உணவை தானே உருவாக்கி கொள்ளும் தகுதியுடன் வளர்ந்த தாவரம் நீரின் வேகத்தின் மூலம் இனபெருக்கம் செய்து கொண்டது, தாவரத்திலிருந்து விலங்காக மாறி கொண்டிருக்கையில் ஒரே ஒரு உயிரினம் இன்னும் முழுமையடையாமல் பாதியில் நின்று கொண்டிருக்கிறது, இம்மாதிரியான உயிரினங்கள் தான் பரிணாமம் நம்க்கு விட்டு சென்றுள்ள சுவடுகள், பவழப்பாறை என அழைக்கப்படுவது என்னவென்று பலர் அறிந்திருக்கலாம்! கடற்பரப்பு இவ்வளவு செழுமையாக இருக்கிறது என அறிய பவழப்பாறைகள் தான் சாட்சி, தாவரத்தை போன்று ஓரிடத்தில் தனது காலனியை வளர்த்து கொள்ளும் பவழப்பாறைகள் பெருமளவு தாவரத்தின் குணங்களை கொண்டது, ஆனால் அவைகள் தனிதனியே முட்டையையும், விந்தையும் பீச்சியடித்து இனப்பெருக்கம் செய்து கொள்கிறது!

இனபெருக்க உறுப்பை பெற்றிருந்தாலும் இன்னும் பாலூட்டி அல்லாத மீன்கள், விந்தையும், முட்டையையும், பீச்சியடித்து தான் இனபெருக்கம் செய்து கொள்கின்றன, தாவரங்களுக்கு இனபெருக்கத்திற்கு பருவகாலம் இருப்பது போல், மீன்கள் மட்டுமல்லாது பல உயிரினங்களும் தனக்கென ஒரு காலத்தை வைத்திருக்கின்றன, விதைகள் எவ்வாறு கடினமான ஓடுகளால் பாதுகாக்கபடுகின்றதோ அதே போல் பல உயிரினங்களின் முட்டைகள் கடினமான ஓடுகளால் பாதுகாக்கப்படுகின்றன! பாலூட்டிகள் அல்லாத அனைத்து விலங்களும் பிறந்த உடனே தனியாக வாழும் தகுதியை பெற்றிருக்கின்றன, ஆனால் அவ்வாறு தகுதி பெறாத விலங்குகள் தான் பாலூட்டிகளாக பரிணமித்தன என்பதே உண்மை!

உயிரினங்களில் இனபெருக்கத்திற்கு கூடுதல் தகுதி பெற்ற ஒரே விலங்கு மனிதன் மட்டுமே, பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பிறகே உச்சகட்டம்(orgasm) என்பது மனிதனுக்கு மட்டுமே வாய்த்த ஒரு அரிய நிகழ்வு என்பது புரிந்தது, மனிதனுக்கு நெருங்கிய உயிரினமான சிம்பன்சியை தவிர வேறு எந்த விலங்குகளும் சுயமைதுனம் செய்து கொள்ள விரும்பியதில்லை, மனிதனுக்கு மட்டுமே இனபெருக்கத்தின் தேவையையும் மீறி உடலுறவில் அதிகபட்சம் இன்பம் தேவைபட்டது, ஏன் என்ற கேள்விக்கு இன்னும் ஆராய்ச்சி நடந்து கொண்டுதானிருக்கிறது, நாடோடிகளாக வாழ்ந்த முதல் வளர்ச்சி பெற்ற மனித இனம் உணவுக்காக சண்டையிட்டு கொண்டதை விட இணைக்காக சண்டையிட்டதே அதிகம் என்கிறார்கள்!


நான்கு காலில் நடந்து கொண்டிருந்த மனிதன் நிமிர்ந்து நின்றது, உடலுக்கு குறைவான வேலையும், அறிவுக்கு(மூளைக்கு) அதிகப்பட்ச வேலை கொடுத்தது, உடைகள் மூலம் இனபெருக்க உறுப்பை மறைத்தது, மனிதனுக்கு உடலுறவில் மேல் நாட்டத்தை குறைத்தது என்பது விஞ்ஞானிகள் கருத்து, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இனபெருக்கம் கட்டாய கடமை என்றாலும் மனித இனத்தில் மட்டுமே ஆன்மீகம் குறுக்கே நின்றது, பிரம்மச்சார்யம், கடவுளுக்கு உகந்த நாட்களில் மட்டுமே கூட வேண்டும் என பூசாரிகளால் உடலுறவு மறுக்கப்படுதல், இடைவிடாத போர்களால் பல ஆண்கள் உயிரிழப்பு,(தலைவனுக்கு தான் பெண்கள், மீதி தான் மற்றவர்களுக்கு) ஆகியவை மனித இனத்தொகை வெகுவாக குறைத்தது, வாழும் தகுதியை உடலளவில் வளர்த்து கொள்ள மனிதன் பெற்ற பரிணாம மாற்றம் தான் உடலுறவில் உச்சகட்ட இன்பம்!

http://valpaiyan.blogspot.com

கருத்துகள் இல்லை: