Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

வியாழன், டிசம்பர் 10, 2009

வாழ்க! வளமுடன்!



வெந்தயமும் வெந்தயக்கீரையும்


பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே வெந்தயத்தை மகத்தான மூலிகை என்றார்கள் அபூர்வ சக்தி வாய்ந்த மூலிகை என்றார்கள். அதைப்போலவே இந்த நூற்றாண்டிலும் இது சஞ்சீவி போன்ற மூலிகை என்று இன்றைய உணவு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எலும்பை வளர்க்கும் பாஸ்பரஸ் உப்புக்களும் (Phosphorus) சதையை வளர்க்கும் லெஸிதின் பொருளும் (Lecithin) முட்டை சத்து போன்ற நூக்லியோ அல்பீயமனும் (Albumin) இதைப்போன்ற பிற சத்துக்களும் இரும்பு சத்தும், கால்சியமும் வெந்தயத்தில் உள்ளன.

வெந்தயக் கீரையில் Vitamin A, B, C, Sodium, Chlorine போன்ற தாதுப் பொருட்களும் உள்ளன.

பயன்கள்
1)வெந்தயத்தை வறுத்து பொடித்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும்.
2)வெந்தயக் கஞ்சி தாய்ப்பால் பெருகும், குருதி பெருகும்.
3)அரைத்து தலையில் தேய்க்க தலைமுடி கருப்பாகவும் பளபளப்பாகவும் காணும்.
4)வெந்தயத்தை ஊறவைத்து தினமும் காலையில் நீராகாரமாக உட்கொண்டால் உடல் பெருக்கும்.
5)கல்லீரல் வீக்கத்திற்கும், நாட்பட்ட இருமல், வயிற்று வலி, இவற்றிற்கும் மிகவும் நல்லது.
6)மூத்திர உறுப்புகளை சுத்தப்படுத்தி நீரை துரிதமாக இறக்கும்.
7)பசியை உண்டாக்கும்.
8)மூளை நரம்பை பலப்படுத்தும்.
9)வெந்தயக்கீரை சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல், மந்தம், வாயு, இருமல், மாதவிடாய்த் தொல்லை வயிற்று வலி முதலியன குணமாகும்.
10)வெந்தயம் கணக்காய்ச்சல், சீதக்கழிச்சல் வெள்ளை உடல் எரிச்சல், நீர்வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் தீர்க்கும், ஆண்மை தரும்.
11)இலையை அரைத்துக் கட்ட உள் (அ) வெளிப்புறத்தில் காணும் வீக்கம் புண்கள் போகும்.
12)வெந்தயக்கீரை + கோழிமுட்டை + தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் சமைத்து சாப்பிட இடுப்பு வலி தீரும்.
13)வெந்தயக்கீரை + வாதுமைப் பருப்பு + கசகசா + கோதுமைப்பால் + நெய் + பால் + சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுவலுக்கும் வன்மையுண்டாகும்.





 மருத்துவ சக்தி படைத்தது ஆங்கிலத்தில்
 இதற்கு புயசடiஉ என்று பெயர். இதற்கு வெங்காயத்தைப் பார்க்கிலும்
 காரமதிகம் நீலகிரி பூண்டு மிகவும் பெயர் பெற்றது.
மருத்துவ குணங்கள்
1)வெள்ளைப் பூண்டு ஒரு சிறந்த கிருமி நாசினி
2)நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
3)வெள்ளைப்பூண்டு + மிளகு சேர்த்தரைத்து சாப்பிட வயிற்றுப்பிசம் தீரும்.
4)வெள்ளைப்பூண்டை அரைத்து கட்டிக்கு போட கட்டி உடையும்.
5)பூண்டில் இரண்டு வித முக்கிய சத்துக்கள் அடங்கி உள்ளன. 

ஒன்று Sulphur மற்றொன்று Sulphur of Alley இந்த சத்துக்கள் இருப்பதால்
6)வெள்ளைப்பூண்டானது வியர்வையை பெருக்கும் உடற்சக்தியை 

அதிகப்படுத்தும், சிறுநீர் தாராளமாக பிரிய வகை செய்யும், சிறுநீர்ப்பை,
 ஈரல், ஆகியவற்றின் வேலையைத் தூண்டி விடும்.
7)இருமல், இரைப்பு, வயிற்றுப்புழுவை நீக்கும்.
8)வெள்ளைப்பூண்டு சாற்றைக் காதில்விட காது பிரச்சனை தீரும்.
9)தாய்ப்பலை அதிகரிக்கும், சளியைக் கரைத்து சுவாசத் தடையை நீக்கும் 

சீரண சக்தியை அதிகரிக்கும்.
10)உடல் பருமன், மூக்கடைப்பு, பீனிச தொல்லைகள் நீக்கும்.
11)Cholosterol-ஐ கட்டுப்படுத்தும்.
12)மூட்டுவலி, முடக்குவாதம், ஆகியவற்றை குறைக்கும்.
13)பூண்டு + நெய் + சர்க்கரை சேர்த்து பிசைந்து உண்ண சீதக்கழிச்சல் தீரும்.
14)நல்லெண்ணெய்யில் பூண்டைக் காய்ச்சி காது நோய்க்கு விடலாம்.

15.பூண்டுப்பால்
உரித்த பூண்டு 15 பற்கள்
பால் 1ஃ4 லிட்டர்
பாலில் பூண்டை வேகவைத்து, இரவு உணவிற்கு பிறகு உண்ணலாம். 

வாயு நீங்கும், கபம் கரையும் Eosinophilia, BP நீங்கும்.
16. பூண்டானது இருதய இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதைத்

 தடுக்கிறது.
17. இரைப்பை புற்று நோயை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி 

எறியக்கூடியது. வெள்ளைப்பூண்டு.
18. புற்றை உண்டாக்கும் Nitrosamines என்ற பொருளை உடலில்

 உற்பத்தியாக விடாமல் பூண்டு தடுத்து உதவுகிறது. புற்று நோயை 
எதிர்க்கும் சக்தியும் உடலில் உருவாகிறது.
19. காளான் வகை தொற்று நோய்களான Candida Albicans ஐ வளர விடாமல்

 தடுக்கிறது.
20. பூண்டுப்பால் + மஞ்சள் பொடி சேர்த்து கலந்து அருந்தும்போது 

Tropical Eosinophilia போன்ற ஈளை, இரைப்பு நோய்கள் 
கட்டுப்பட்டு குணமடைகிறது.




வேம்பு

வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும்,

 வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். 
சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள் அறிந்தனர். 

அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர்.
 இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் 

கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie 
போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு
 கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.

லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின்

 மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், 
மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று 
நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும் 

வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.
வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் 
இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்
 கழகம் கண்டறிந்துள்ளது.

வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக் 

கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
வேப்ப எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் 
மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப்
 பெறலாம் என்கின்றனர்.
எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் 

அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து 
விட்டதை அறிந்தனர். சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும்
 கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று விடுவதையும் கண்டுள்ளனர்.

நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின் 

வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.
வேப்பம் பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக்
 கட்டுப்படுத்துவதாக சித்திக் ஆலம் என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. 

காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும்
 நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக 
ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.

வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து

 மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் 
தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.

வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும் மேற்பட்ட

 பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

வேறுபெயர்கள்
அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.

மருத்துவப் பண்புகள்
இலை
1)புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.
2)வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட 

புண்கள் ஆறும்.
3)வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.
4)வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த 

ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

பூ
பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.

காய் + பழம்
தோல் நோய் தீரும்.

விதை
1)மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.
2)விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.

நெய்
1)துஷ்ட புண்கள் தீரும்.
2)ஆராத இரணங்கள் தீரும்.

வேப்பம் பட்டை
1)வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.
2)கஷாயம் குட்டம் தீரும்.

அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை

 நிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் 
தெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க் 
கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
பிசின்
1)மேக நோயைப் போக்கும்.

குறிப்புகள்
பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.

100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து

 பாலில் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.

பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, 

தோல் பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.

வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் 

கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து 
வளரும்.

வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை 

செய்து 1 மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை 
உடையதாகும். விந்து கட்டும்

வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு 

மருந்தாகப் பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, 
காது சீழ் மாறும்.

நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன்

 தத்துவம் என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ளதென்றும், 
காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.


http://vethathiri.org

கருத்துகள் இல்லை: