Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

செவ்வாய், ஜூலை 13, 2010

தொலைதூரக் கடவுள்- பாகம் 04

வாழ்க! வளமுடன்! Alagunilaa Inayam. 

குரங்கில் இருந்கு மனிதன் தோன்றினான் என்ற வாதத்தை விட, முதலில் இவ்வுலகை எடுத்துக்கொண்டால் பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியது என்கிறார்கள். 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கலம் கொண்ட செல் உருவாகியதாகவும், 2 பில்லியன் ஆண்டுக்கு முதல் சிக்கலான செல்லமைப்பைக் கொண்ட செல்( கலம்) உருவாகியது என்றும், பின்னர் 1 பில்லியன் ஆண்டிற்கு முன்னர் பல கலங்கள் கொண்ட செல் உருவாகி , பின்னர் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சில மிருகங்கள் உருவாகியதாகவும் சொல்லப்படுகிறது.

பின்னர் முறையே :

இற்றைக்கு 570 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரபோடாக்களும்

550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சிக்கலான வடிவம் கொண்ட சில மிருகங்களும்

500 மில்லியன் ஆண்டுக்கு முன்னர் மீன்களும், சூரிய ஒளியை கொண்டு சக்தியை தயாரிக்கும் உயிரினங்களும் உருவாகின.

475 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சில தாவர வகைகள் உருவாகின.

360 மில்லியன் ஆண்டிற்கு முன்னர் அமீபியா போன்ற பிராணிகள்( உதாரணம் தவளை) போன்ற உயிரினம் உருவாகியது

300 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஊர்வனவும்

200 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பாலூட்டிகளும்

150 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பறவைகளும்

65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் சில வகை டைனசார்களும்

2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஜீனஸ் ஹோமோ என்ற மனிதரை ஒத்த இனமும் தோன்றியது.

200 ஆயிரம் வருடத்திற்கு முன்னரே தற்போது காணப்படும் மனிதனை ஒத்த மனிதன் தோன்றினான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதில் ஜீனஸ் ஹோமோ எனப்படும் இனம் மனிதரைப் போலக் காட்சியளிப்பதாக அதன் எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் என்பவற்றை பார்க்கும் போது தெரிவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்ரோலோபோதனிக் என்ற இனமும் உருவாகியது, அதுவும் மனிதர்களைப் போலவே காட்சியளித்தது என்பதற்கான ஆதாரங்களும் உள்ளது. இதனிடையே பராந்தரோப்ஸ் எனப்படும் மற்றும் ஒரு மனித இனம் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தும் வெவ்வேறு காலப் பகுதியில் உருவாகி இருந்தாலும் சில ஆண்டுகளில் அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு இறுதியாக மனிதன் தோன்றி இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். குறிப்பாக கென்யா, ஆபிரிக்கா, ஜோர்ஜியா, ஜாவா தீவுகள், சீனா, இந்தியா போன்ற இடங்களிலேயே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வகையான ஜீனோ ஹோமோ இனம் தோன்றியுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் தோன்றிய இனம் தாடை பெரிதாகவும் மண்டை ஓடு பின்புறம் நீளமாகவும், காணப்படுகிறது. ஆசியக் கண்டத்தில் தோன்றிய இனத்தில் மண்டை ஓடு சிறியதாகவும் உயரம் குறைவானதாகவும், சில குளிர் பிரதேசங்களில் தோன்றிய ஜீனோ ஹோமோக்கள் பொதுவான ஒரு அமைப்பையும் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.

பிற்காலத்தில் இவற்றின் கலவையே தற்போது உள்ள நவீன மனித இனமாகும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். நவீன மனிதனுக்கும் குரங்குகளுக்கும் இடைப்பட்ட ஒரு இனம் வாழ்ந்ததாகவும் அவை பல பொருட்களை உபயோகிக்க கற்றுக்கொண்டதையும் ஆய்வாளர்களும் அகழ்வாரய்ச்சி செய்பர்களும் தற்போது நிரூபித்துள்ளனர். ஆதி காலத்தில் உள்ள மனிதனின் கைகள் நீளமாக இருந்ததையும் பின்னர் அது குறுகியதும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



சூரிய ஒளி இருப்பதால் அதைப் பார்க்க கண்கள் உருவாகியிருக்கின்றன, ஒலி என்று ஒன்று இருப்பதால் அதைக் கேட்க காதுகள் உருவாகியிருக்கின்றன. கைகள் நீளமாக இருக்கவேண்டியது அவசியம் இல்லை என்றால் பரிணாம வளர்ச்சியின் போது அவை குட்டையாகிவிடுகின்றன என்று, எல்லாவற்றையும் பரிணாம வளர்ச்சி என்று விஞ்ஞானிகள் அதன் தலையில் கட்டி விடுகிறார்கள், ஒருபடி மேலே போய் பரிணாம வளர்ச்சி என்றால் என்ன என்றால் அதற்கு சிலர் இயற்கையையே காரணம் என்று கூறுகிறார்கள், அதாவது சூரிய ஒளி ஒரு பொருள் மீது பட்டுத் தெறித்து அது எமது கண்களை அடைந்து விழித்திரையில் தலைகீழாகத்தான் விம்பமாகத் தோன்றுகிறது, இருப்பினும் அதனை மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்புகள் சரியான, நேரான பக்கமாக காட்டுகிறது. இது கூட பரிணாம வளர்ச்சிக்குத் தெரியுமா இல்லை இயற்கை இதை அறியுமா? என்ன ஒரு வேடிக்கையான் விடயம்.

உதாரணமாக ஒரு மனிதன் முதல் முறையாக காயப்படுகிறான் என்று வைத்துக்கொள்வேம், அவனுக்கு குருதிப்பெருக்கு அதிகமாகி, ரத்தம் கூடுதலாக வெளியேறுகிறது. அப்போது இரத்த அழுத்தம் குறைகிறது, உடனே மூளை உடலில் உள்ள ரத்த நாளங்கள் அனைத்தின் விட்டத்தை குறைக்க சமிக்ஞைகளை அனுப்பி, அதன் விட்டத்தைக் குறைத்து ரத்த அழுத்தத்தை சீர்செய்ய முனைகிறது, இந்த அறிவு மூளைக்கு எவ்வாறு வந்தது என்று யாராலும் கூறமுடியுமா? இல்லை ஒரு எண்ணைத் துளியை எடுத்து நீரில் போட்டால் அது ஏன் வட்டமாகவோ அல்லது நீள் வட்டமாகவோ தோன்றுகிறது, ஏன் ஒரு முக்கோணமாகவோ அல்லது சதுரமாகவோ தோன்றுவது இல்லை எனக் கூறமுடியுமா? அல்லது தண்ணீரில் கல்லை எறிந்தால் அதில் உண்டாகும் அதிவலைகள் ஏன் வட்டமாக இருக்கவேண்டும்?

அதாவது இவ் உலகில் பொளதீகம் என்பது மாறுவது இல்லை. சூரிய ஒளி, ஒளி விம்பம், ஒலி அதன் வேகம் என்பன மாறவில்லை, அதற்கு ஏற்றால் போல் நாம் மாறி இருக்கிறோம். இரவில் பார்க்கும் திறன் பூனைக்கும் சில மிருகங்களுக்கும் உண்டு, இவற்றில் சில பகலிலும் இரவிலும் பார்க்கும் திறன் கொண்டவை, இவ்வளவு பரிணாம வளர்ச்சியடைந்த மனிதனுக்கு ஏன் இரவில் பார்க்கும் கண்கள் இல்லை? ஏன் இயற்கை எமக்கு அதனைத் தரவில்லை? இப்படி பல கேள்விகள் உண்டு.

மொத்தமாகச் சொல்லப்போனால், இதை எல்லம் நெறிப்படுத்த ஒரு காரணி உண்டு, ஆனால் அது உடலில் இருக்கிறதா இல்லை புறச்சூழலில் இருக்கின்றதா என்பதே பெரும் கேள்வி. ஆனால் நிச்சயம் அது கடவுள் அல்ல.. ஆனால் அது ஒரு சக்தி. மற்றைய விலங்கினத்தில் பல மாறுதல்கள் ஏற்படுத்தாது ,மனிதனில் மட்டும் இவ்வாறான பல மாற்றங்கள் ஏற்படக் காரணம் என்ன? எமது உடலில் குறிப்பாக மூளை இயங்கும் தன்மையை நெறிப்படுத்தும் மரபணு எங்கிருந்து வந்தது என்பதே தற்போதைய பெரும் கேள்வி. ஏனெனில் அதில் 100 ஆகப் பிரித்து ஒரு பங்கு ஒரு விலங்கினத்திற்கு சென்றிருந்தால் கூட அந்த விலங்கினம் கொஞ்சம் கூடுதலான மூளையுடன் செயல்திறன் மிக்கதாக மாறியிருக்கும்.

விலங்கினங்கள் பிறந்த அதே உலகில் நாமும் பிறந்தோம் இருப்பினும் எம்மில் மட்டும் ஏன் இந்த அபார மூளை வளர்ச்சி? விலங்குகளை விட நாம் ஏன் பல லட்சம் மடங்கு உயர்வாகக் காணப்படுகிறோம். இது ஒரு மர்மமான விடயம், கேட்டால் 6 ஆவது அறிவு இருப்பதாகச் சொல்லி தட்டிக் கழித்துவிடுவார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதாவது விலங்கினத்திற்கு 5 அறிவு மனித இனத்திற்கு 6 அறிவு என்பார்கள் அப்படியாயின் இந்த 1 அறிவு வித்தியாசத்தில் பல லட்சம் மடங்கு நாம் உயர்வாக இருக்கிறோமா? ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல.

எமது உடலில் சில மரபியல் பண்புகளை சந்ததிக்குக் கடத்தும் செயல் இருக்கிறது மறுப்பதற்கு இல்லை. அதேபோல மனித உடலில் இயங்கும் சில தானியங்கி உறுப்புக்கள் இவ்வாறான பண்புகளைக் கொண்டு இயங்குகின்றன. குறிப்பாக நான் மேற்குறிப்பிட்டது போல சில மரபியல் பண்புகள் மூளையில் ஏற்கனவே பதிவாகி இருப்பதால் அவை அதுபோல இயங்க ஏதுவாக அமைகிறது. இருப்பினும் மூளையில் சேகரிக்கப்படும் சம்பவங்களை நினைவில் வைத்திருக்கும் செல்கள் அந்த நினைவுகளை சந்ததிகளுக்கு கடத்துவது இல்லை அது ஏன்? உதாரணமாக ஒருவர் ஓவியம் வரையும் திறமைகொண்டவராக இருக்கலாம், அவருக்குப் பிறக்கும் பிள்ளைகளில் ஒன்று நிச்சயம் ஓவியம் வரையும் திறனைக் கொன்டிருக்கும், ஆனால் அவர் நினைவுகளைச் சுமக்கும் செல்கள் அதனை தன் பரம்பரைக்கு கடத்துவது இல்லை.

இது என்ன ஒரு அறிவியல் அற்ற கேள்வி என நீங்கள் எண்ணலாம், அது மூளையில் சேகரிக்கப்படும் ஒரு விடயம், அப்படியாயின் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம், அவருக்கு பிறக்கும் குழந்தைக்கும் தெரிந்திருக்கும், கரு உருவாகும் போது குறிப்பிட்ட செல் மூளையை அடைந்து அந்த சில சம்பவத்தை ஏன் நினைவில் வைத்திருக்கக் கூடாது? இப்படி ஏன் நாம் படைக்கப்படவில்லை? என எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்தது உண்டா? நாம் கண்களால் பார்க்கும் காட்சிகள் சுமார் 3 செகண்டுகள் நிலைத்திருப்பதால் அவை மூளையின் முதல் சேமிக்கும் பரப்பில் பதிவாகின்றன. சில சம்பவங்கள் எம்மைக் கவர்ந்தால் அவை இரண்டாவது பரப்பில் சேமிக்கப்படுகின்றன, அதை நாம் யோசித்தால் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம், ஆனால் சில அதிர்ச்சிச் சம்பவங்கள் எமது மூளையில் மூன்றாவது படலத்தில் சேமிக்கப்படுகின்றன, அவை வாழ்நாளில் மறக்கமுடியாதவையாக, அல்லது நிதம் நினைவில் இருக்கக்கூடியவையாக பதிவாகின்றன.

உடலில் எப்பகுதியிலாவது ஒரு சிறு குண்டூசி குத்தினாலும் நரம்புகள் அதை மூளைக்கு எடுத்துச் செல்வதன் மூலம் நாம் வலியை உணர்கிறோம், ஆனால் மூளையில் இருந்து மூளைக்கு உணர்ச்சி நரம்புகள் ஏதும் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?அதாவது மூளையின் வெளிப்புறத்தை நீங்கள் தொட்டால் அது மூளைக்கே தெரியாது. அல்லது மூளையை ஒரு ஊசியால் குத்தினால் மூளை அதனை உணராது. இவ்வாறு அமைய காரணம் என்ன, மனிதனின் உடலமைப்பு இந்த பூமியோடு ஒத்துவாழ ஏதுவாகவா அமைந்திருக்கிறதா? இல்லை மனிதனும் விலங்குகளைப் போல தோன்றி உயிர் வாழ்ந்துகொண்டிருந்த சமயம், அவனை நெறிப்படுத்த, அவன் மூளையை சக்திவாய்ந்த ஒன்றாக மாற்ற புத்திஜீவி ஒன்று முயன்றதா?

ஆதி காலம் தொட்டு கடவுள் மனிதனைப் படைத்ததாகவும் அவர் வானத்தில் இருந்து வந்ததாகவும் ஏன் எல்லா மதங்களும் சொல்கின்றன? ஒரு மதத்திலும் மண்ணுக்கு அடியில் இருந்து கடவுள் வந்ததாக சொல்லப்படவில்லையே, கோவில் தொடக்கம் சர்ஜ் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்கள் மீது ஏன் உலோகத்தால் ஆன ஆண்டனா போன்ற (உள்வாங்கிகள்) அமைப்பு காணப்படவேண்டும்? பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த மனிதர்கள் தங்கியிருந்த இடம் தான் பின்னர் கோயில் என்று அழைக்கப்பட்டதா, இது பேன்ற மர்மமான கேள்விகளின் விடைதேடி அடுத்த பாகம் வெளியாகும்...




http://athirvu.com

கருத்துகள் இல்லை: