Vaalga


வாழ்க ! என்றும் வளமுடன்!

ஞாயிறு, நவம்பர் 15, 2009

மருத்துவ குறிப்புகள்

உடல்வலி குணமாக : வில்வ இலைச் சாறு, அருகம்புல் சாறு கலந்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர, குணம் பெறலாம்.

ஞாபக சக்தி பெருக : வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து உண்ணலாம்.

முகப் பருக்கள் ஒழிய : அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர ஒழியும்.

தும்மல் நிற்க : தூதுவளைப் பொடியில் மிளகுப் பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட நிற்கும்.

சதைப் பெருக்கத்திற்கு : நெல்லிக்காய் தூள் அரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வர உடல் சதைப் பிடிப்பு கூடுதலாகும்.

புண்கள் ஆற : கருவேல இலையை அரைத்து புண்கள் மீது கட்ட ஆறும்.

உடல் ஊறல் அரிப்பு குணமாக : உத்தாமணி இலைச் சாற்றினைப் பூசி காய்ந்த பின் குளித்துவர தீரும்.

கால் ஆணி குணமாக : வெள்ளை அருகு இலையை அரைத்து வைத்துக் கட்ட குணமாகும்.

தோல் வியாதி குணமாக : தகரை செடியின் வேரை எலுமிச்ச சாறு விட்டு அரைத்துப் பூச குணமாகும்.

நமைச்சல் தடிப்பு நீங்க : வேப்பமரத்துப் பட்டையைத் தூளாக்கி உடம்பில் பூசி, அரை மணி நேரம் கழித்து குளிக்க நீங்கும்.

அக்கி குணமாக : ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து தடவி வர குணமாகும்.


கட்டிகள் குணமாக : அந்திமந்தாரை இலையின் மீது ஆலிவ் எண்ணெய் தடவி அனலில் சூடுகாட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்ட குணமாகும்.

முடி நன்றாக வளர : மருதாணி இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி, பச்சை நிறம் மாறாமல் காய்ச்சித் தடவி வர நன்றாக வளரும்.

செம்பட்டை முடி கருப்பாக : நில ஆவார இலையுடன் மருதாணி இலையைச் சேர்த்து அரைத்து தடவி வரவேண்டும்.

கம்பளிப் பூச்சிக் கடிக்கு : வெற்றிலையைக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தித் தேய்க்க குணம் பெறலாம்.

எலிக்கடி விஷம் முறிய : குப்பைமேனி இலையை அரைத்து, கடித்த இடத்தில் வைத்துக்கட்ட விஷம் முறியும்.


ரோஜா அர்த்தர் : முக வசீகரம் கூடும்.

பாதாம்பருப்பு + தேங்காய் : ஞாபகசக்தி கூடும்

கதர் சன சூரணம் : காய்ச்சல் நிற்கும்


ஆத்திப்பழம் : அம்மை குணமாகும்

எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்

பால் + கசகசா : துõக்கம் வரும்

கோதுமை, பீன்ஸ் : நரம்பு உறுதியாகும்

கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்

மல்லிகை இலை : கண் சிவப்பை போக்கும்

ரோஜா குல்கந்து : மலச்சிக்கல் நீங்கும்

வேப்பெண்ணெய் : மூக்கடைப்பு நீங்கும்

வெங்காயம் : நோய் தடுப்பு கூடும்

ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, காரட் : இருதயம் பலம் பெறும்

மாம்பழ ஜூஸ் : நரம்புத் தளர்ச்சி போக்கும்

ஐஸ் : மூக்கில் வரும் ரத்தம் தடுக்கும்

புதினா : கர்ப்பிணிகள் வாந்தியை நிறுத்தும்

சுக்கும், பெருங்காயம், பசும்பால் : தலைவலி நீங்கும்

குப்பை மேனி : மலேரியா தீரும்.

பேரிச்சை : கொழுப்பை நீக்கும்

டீ : வயிற்றுக் கடுப்பு போக்கும்

கொய்யாப்பழம் : நீரிழிவு போக்கும்

செம்பருத்தி : உடல் சூடு தணியும்

காரட் ஜூஸ் : ரத்த சோகை தீரும்.

முட்டைகோஸ் : அல்சர் தீர்க்கும்

மருதாணிப்பூ : சுகமான துõக்கம் தரும்

நெல்லிக்காய் : எலும்பு வளர்ச்சியடையும்

கருத்துகள் இல்லை: